வேலைநிறுத்தம் முடித்து, வேலைநிறுத்த நாட்களை நாமே ஈடு செய்வோம் என்று அறிவித்துவிட்டு போராடிய நிலையில் நீதிமன்றமும் ஈடுசெய்து கொள்ளக்கூறிவிட்டது!இந்நிலையில் கல்வித்துறை தன் ச்சபட்ச விசுவாசத்தைக் காட்ட தீபாவளியன்றும் பணிசெய்ய ஆணையிட்டு பணித்திருக்கிறது.இது ஒன்றும் நமக்கு வருந்தற்குரிய செய்தி அல்ல!நம் கோரிக்கைகள் வெல்ல தீபாவளியன்று சிறையில் இருக்கக்கூட தயாராக இருந்த நமக்கு பணி செய்தல் மகிழ்ச்சியே!ஆனால் கல்வித்துறை மாணவர்கள் வருவார்களா?என்பதை உணராமல் ஆணைபிறப்பித்தார்களா?அல்லது தீபாவளி என்று அறியாமல் ஆணையிட்டார்களா?தெரியாது!பின் இந்த ஆணையில் மாற்றம் செய்தால் கல்வித்துறை பொறுப்பற்ற நிலை அல்லது பழிவாங்கும் நிலை வெளிப்படும்.மாற்றம் செய்யப்படாவிட்டால் அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நிலை வெளிப்படும்.எதுவரினும் கவலையில்லை.இடைநிலை ஆசிரியர் நிலை போராட்டத்தின் பின்னும் ,ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட பின்னும் அதே நிலையே தொடர்கிறது.இடைநிலை ஆசிரியரோ கண்ணீரோடு விக்கித்து நிற்கின்றார்.கொண்டாட்ட மனப்பான்மை ஏது.இந்நிலையில் நன்றி சொல்ல ஏதுமில்லை எனாத்தெரிந்தும் குரூர சிந்தையோடு ஒரு கூட்டம் நன்றி தெரிவிக்கும் நிலை.நீண்ட தூர போராட்ட பாதையானாலும், முழுமையாக நம்மை தியாகப்படுத்திக்கொள்கிற போராட்டமானாலும் சரி எப்போது ஊதியமுரண்பாடு களையப்படுகிறதோ?எப்போது புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிக்கப்படுகின்றதோ?அன்றுதான் உண்மையான தீபாவளி ஆசிரியர் சமுதாயம் கொண்டாட இயலும்.தயாராவோம் இன்னொரு போருக்கு! டே.குன்வர். மாநிலதலைவர் ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
சனி, 14 அக்டோபர், 2017
இடைநிலை ஆசிரியருக்கு எது தீபாவளி!
வேலைநிறுத்தம் முடித்து, வேலைநிறுத்த நாட்களை நாமே ஈடு செய்வோம் என்று அறிவித்துவிட்டு போராடிய நிலையில் நீதிமன்றமும் ஈடுசெய்து கொள்ளக்கூறிவிட்டது!இந்நிலையில் கல்வித்துறை தன் ச்சபட்ச விசுவாசத்தைக் காட்ட தீபாவளியன்றும் பணிசெய்ய ஆணையிட்டு பணித்திருக்கிறது.இது ஒன்றும் நமக்கு வருந்தற்குரிய செய்தி அல்ல!நம் கோரிக்கைகள் வெல்ல தீபாவளியன்று சிறையில் இருக்கக்கூட தயாராக இருந்த நமக்கு பணி செய்தல் மகிழ்ச்சியே!ஆனால் கல்வித்துறை மாணவர்கள் வருவார்களா?என்பதை உணராமல் ஆணைபிறப்பித்தார்களா?அல்லது தீபாவளி என்று அறியாமல் ஆணையிட்டார்களா?தெரியாது!பின் இந்த ஆணையில் மாற்றம் செய்தால் கல்வித்துறை பொறுப்பற்ற நிலை அல்லது பழிவாங்கும் நிலை வெளிப்படும்.மாற்றம் செய்யப்படாவிட்டால் அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நிலை வெளிப்படும்.எதுவரினும் கவலையில்லை.இடைநிலை ஆசிரியர் நிலை போராட்டத்தின் பின்னும் ,ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட பின்னும் அதே நிலையே தொடர்கிறது.இடைநிலை ஆசிரியரோ கண்ணீரோடு விக்கித்து நிற்கின்றார்.கொண்டாட்ட மனப்பான்மை ஏது.இந்நிலையில் நன்றி சொல்ல ஏதுமில்லை எனாத்தெரிந்தும் குரூர சிந்தையோடு ஒரு கூட்டம் நன்றி தெரிவிக்கும் நிலை.நீண்ட தூர போராட்ட பாதையானாலும், முழுமையாக நம்மை தியாகப்படுத்திக்கொள்கிற போராட்டமானாலும் சரி எப்போது ஊதியமுரண்பாடு களையப்படுகிறதோ?எப்போது புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிக்கப்படுகின்றதோ?அன்றுதான் உண்மையான தீபாவளி ஆசிரியர் சமுதாயம் கொண்டாட இயலும்.தயாராவோம் இன்னொரு போருக்கு! டே.குன்வர். மாநிலதலைவர் ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.











