நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

(7th pay commision)7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதியக் கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7-வது ஊதியக் கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
Share:

சனி, 15 ஆகஸ்ட், 2015

பணி நிரவல் ஒன்றித்திற்குள்ளேயே செய்துகொள்ளலாம்.- 10-08-2015 இயக்குனர் சந்திப்பு

ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் டே.குன்வர் சோஸ்வா வளவன் பொதுச்செயலர் ஜென்நாதன் மாநில பொருளாளர் வை.பொய்யாமொழி மாநில துணைச்செயலர் பொன்ராஜ் ஜான்சன் , தூத்துக்குடி மாவட்ட செயலர் ஸ்டீபன் , சிவகெங்கை மாவட்ட செயலர் செல்லப்பா , தலைவர் அருளானந்து , வேலூர் மாவட்ட செயலர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கொடைக்கானல் ஆரோக்கியசாமி ஆகியோர் மாண்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்களைச் 10.08.2015 அன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் . மனுவை பரிசீலித்த இயக்குனர் கீழ்கண்ட உறுதிகளை அளித்திட்டார்
1.பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொண்டால் முழுசம்பளம் வழங்க ஆணை.
2.இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் சார்பு ஆணை .
3. விலையில்லா பொருட்களை பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு.
4.காலநிலை , கடுங்குளிர் போன்ற பிரச்சனைகள் நிலவும் கொடைக்கானல் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைத்தல் .
5.வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் உ.தொ.க.அலுவலத்தில் தேங்கியுள்ள 170பணப்பலன் சார்ந்த கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு போன்ற உறுதி மொழிகளை அளித்திட்டார் . மேலும் இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை சார்ந்த போராட்டம் தொடர்பாக முடிவெடுக்க விரைவில் மாநில பொதுக்குழு திருச்சியில் கூடும் .
 -மாநில தலைவர்


Share:

teachers district transfer application&director proseedings

district transfer application






Share:

வெள்ளி, 9 ஜனவரி, 2015

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

இயக்க அடலேறுகளே!

                                 இயக்கத்தின் இதயமாகவும் , நமது இதயத் துடிப்பாகவும் விளங்கும் அண்ணன் பொதுச்செயளாளர் ஜெகனாதன் அவர்கள் அமெரிக்கா சென்று வியாழன் இரவு தாயகம் திரும்பியுள்ளார்.அவ்ர் பயணம் வெற்றிகரமாக அமைந்து அவர் நலமுடன் வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி! அண்ணன் அமெரிக்கா சென்ற போதும் அந்த தொலைவு தெரியா வண்ணம் தினந்தோறும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இயக்க பணிகளை மேற்கொண்டிருந்தார்.அண்ணனை இயக்க தம்பிகள் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்.தற்காலிக பொறுப்பேற்றிருந்த அண்ணன் தூத்துக்குடி சிங்கம் பொன்ராஜ் ஜான்சன் அவர்களுக்கு நன்றிகள்.
Share:

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

TET & PGTRB ஆன்லைன்

கலந்தாய்வு எவ்வாறு

நடைபெறும்?
ஆன்லைன் கலந்தாய்வு
அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய
நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு
நடைபெறும் இடம் ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்
கல்வி அலுவலகத்தால் நாளை
அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு
துவங்க இருப்பதால், கலந்தாய்வில்
கலந்து கொள்ள இருக்கும் அனைவரும்
காலை 7.30 மணிக்கே உரிய
இடத்திற்கு செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு
எனும் போது பாடவாரியாக
மாவட்டத்தில் உள்ள
காலிப்பணியிடங்கள் பட்டியல்
தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.
(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள
குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு
பெற்றுள்ள தேர்வர்கள்,
வரிசைகிரமமாக
நிறுத்தப்படுவார்கள்.தேர்வு
பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு
நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்பட்டு
அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு -
எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்
உடன் செல்லும் மற்ற நபர்கள்
கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே
அலைபேசி தொடர்பை பயன்படுத்த
தயாராக இருக்கவும்)
பாடவாரியாக
அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர
வரிசைப்படி அழைக்கப்பட்டு
பட்டியலில் உள்ள இடத்தில்
தங்களுக்கு தேவையான இடத்தை
தேர்ந்தெடுக்க
அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்
தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30
நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே
தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட
நேரத்தில் அலைபேசியை
பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள். எனவே முன்னதாகவே
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
இடங்களை வரிசைகிரமமாக தர எண்
இட்டு தயாராக எடுத்து சென்றால்,
முதலாவது இடம் இல்லாவிட்டால்
இரண்டாவது இடம் என்றவாறு
தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு
முறை தங்களுக்கான சான்றிதழ்கள்
சரிபார்க்கப்படலாம். எனவே நாம்
முன்னதாக அறிவுறுத்தியபடி
அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட்
செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என
அனைத்தையும் தயாராக கொண்டு
செல்லவும். குறிப்பாக வேறு மாநில
பட்டம் பெற்றவர்கள் தங்கள்
சான்றிதழ்கள் மதிப்பீடு
செய்யப்பட்டிருப்பின்
அச்சான்றிதழ்களையும் கொண்டு
செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று
கொண்டிருக்கும்போதோ (அ)
முழுமையாக முடிவுற்ற பின்போ தான்
தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில்
தாங்கள் பணிபுரிய உரிய ஆணை
வழங்கப்படும். எனவே தேவையான
தண்ணீர், இதர சிறு உணவு
பொருட்களையும் கொண்டு செல்லவும்.
தங்கள் சொந்த
மாவட்டத்தில் பணி செய்ய உரிய
காலிப்பணியிடம் தாங்கள்
எதிர்பார்த்தபடி அமையவில்லை
எனில் அடுத்த நாள் நடைபெறும்
வேறு மாவட்டத்திற்கான
கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் (
சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற
கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ
அதே இடத்தில் தான் வேறு
மாவட்டத்திற்குள் பணிபுரிய
கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்
இருப்பின் முதன்மைகல்வி
அலுவலகத்தால் முறைப்படி
அறிவிக்கப்படும்).
Share:

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support