நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.

அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!

குறைந்த பட்ச ஊதியம்  ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
குறைந்த பட்ச ஊதியம் (Minimum Wage )
1.1.2014 அன்று ஒரு மத்திய அரசு
ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் 5200 + 1800
= 7000 ஆகும். அன்றைய தேதியில் அவர்
வாங்கியது 100 % D.A. எனவே, அதையும்
சேர்த்து அவரது சம்பளம் 14 ஆயிரம் ஆகும்.
இதைத்தான் ரூ. 26000/- ஆக்க Staff side
(JCM) கோரி உள்ளது.
1957 ம் ஆண்டு இந்திய தொழிலாளர் 15
வது மாநாடு குறைந்த பட்ச ஊதியம்
எப்படி கணக்கிட வேண்டும் என்றும்
வரையறுத்து உள்ளது. இது Dr. Aykroyd
formula எனப்படுகிறது. இதன்படியான
வரையறைகள்.
1. ஒரு தொழிலாளியின் ஊதியம் என்பது
கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்குத்
தேவையான கலோரியை ஈடுகட்ட
தேவையான பொருள்களின் விலையை
அடிப்படையாக கொண்டது.
2. ஒரு நாளைக்கு ஒருவர் இழக்கும்
கலோரி 2700 ஆகும்.
3. கணவனுக்கு ஒரு unit. மனைவிக்கு
0.8unit . இரு குழந்தைகளுக்கு each 0.6
unit. ஆக மொத்தம் 3 unit க்கு தேவையான
செலவைக் கணக்கிட வேண்டும்.
4. இந்த நால்வரும் சேர்ந்து ஒரு மாதத்தில்
பயன்படுத்தும் குறைந்த பட்ச
பொருள்களின் பட்டியல்.
Commodity Quantity
1 அரிசி/ கோதுமை 42.75 Kg
2. பருப்பு வகைகள் 7.20 Kg
3. காய்கறிகள் 9.00 Kg
4. கீரை வகைகள் 11.25 Kg
5. இதர காய்கறிகள் 6.75 Kg
6. பழங்கள் 10.80 Kg
7. பால் 18.00 litre
8. சர்க்கரை / வெல்லம் 5 Kg
9. சமையல் எண்ணெய் 3.6 Kg
10 மீன் 2.5 Kg
11 மாமிசம் 5 Kg
12 . முட்டை 90
13 soap 14
14 Clothes 5.5 metre
1.1.2014 அன்று இந்த பொருட்களின் விலை
என்ன என்று கணக்கிடப் பட்டதில் அது ரூ.
11344/-
5. இத்துடன் 20 % உள்ளிட்டவற்றுக்கு
சேர்க்க வேண்டும். அது ரூ. 3129/- என்று
கணக்கிட பட்டு உள்ளது.
6. 3rd Central Pay Commission
குடிஇருக்கும் வீட்டுக்காக (HRA) 7.5 %
சேர்த்தது.
7. ஆக மொத்தம் ரூ. 15647/-
8. Supreme court ஒரு தீர்ப்பில் இவற்றுடன் 25
சதம் மருத்துவ செலவுகளுக்கும் கல்வி
செலவுகளுக்கும் சேர்க்க கோரி உள்ளது.
அந்த அடிப்படையில் ரூ. 20861/- ஆகிறது.
இது unskilled employee க்கான கணக்காகும்.
ஆனால் இன்று மத்திய அரசில் அனைத்து
துறைகளிலும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி unskilled employee க்கே 10ஆம்
வகுப்பு என்று வந்து விட்டதால் மத்திய
அரசில் அனைவருக்கும் குறைந்த பட்ச
ஊதியமாக skilled employee சம்பளத்தை
நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி
உள்ளனர். அதற்கு unskilled employee
சம்பளமான ரூ. 20861/- உடன் 25% சேர்க்க
வேண்டும். அது ரூ. 5214/- அதை
சேர்த்தால் ரூ. 26075/- வருகிறது.
ஆகவே ரூ.26000/- த்தை Minimum wage
என்று நிர்ணயிக்க வேண்டும் என STAFF SIDE
(JCM) கோரி உள்ளனர்.
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் விவரம்(TET)

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் முந்தைய விவரம் : தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.
அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....
ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை:
இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 சதவீத மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்..
இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...
என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை :
ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..
என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடீரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5 சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள் அவ்வாறு அளிக்க தமிழக அரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்.... என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???
போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?
5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. ஒருவேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என சூசகமாக தெரிவித்தார்....

Share:

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

(7th pay commision)7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதியக் கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7-வது ஊதியக் கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
Share:

சனி, 15 ஆகஸ்ட், 2015

பணி நிரவல் ஒன்றித்திற்குள்ளேயே செய்துகொள்ளலாம்.- 10-08-2015 இயக்குனர் சந்திப்பு

ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் டே.குன்வர் சோஸ்வா வளவன் பொதுச்செயலர் ஜென்நாதன் மாநில பொருளாளர் வை.பொய்யாமொழி மாநில துணைச்செயலர் பொன்ராஜ் ஜான்சன் , தூத்துக்குடி மாவட்ட செயலர் ஸ்டீபன் , சிவகெங்கை மாவட்ட செயலர் செல்லப்பா , தலைவர் அருளானந்து , வேலூர் மாவட்ட செயலர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கொடைக்கானல் ஆரோக்கியசாமி ஆகியோர் மாண்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்களைச் 10.08.2015 அன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் . மனுவை பரிசீலித்த இயக்குனர் கீழ்கண்ட உறுதிகளை அளித்திட்டார்
1.பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொண்டால் முழுசம்பளம் வழங்க ஆணை.
2.இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் சார்பு ஆணை .
3. விலையில்லா பொருட்களை பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு.
4.காலநிலை , கடுங்குளிர் போன்ற பிரச்சனைகள் நிலவும் கொடைக்கானல் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைத்தல் .
5.வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் உ.தொ.க.அலுவலத்தில் தேங்கியுள்ள 170பணப்பலன் சார்ந்த கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு போன்ற உறுதி மொழிகளை அளித்திட்டார் . மேலும் இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை சார்ந்த போராட்டம் தொடர்பாக முடிவெடுக்க விரைவில் மாநில பொதுக்குழு திருச்சியில் கூடும் .
 -மாநில தலைவர்


Share:

teachers district transfer application&director proseedings

district transfer application






Share:

வெள்ளி, 9 ஜனவரி, 2015

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

இயக்க அடலேறுகளே!

                                 இயக்கத்தின் இதயமாகவும் , நமது இதயத் துடிப்பாகவும் விளங்கும் அண்ணன் பொதுச்செயளாளர் ஜெகனாதன் அவர்கள் அமெரிக்கா சென்று வியாழன் இரவு தாயகம் திரும்பியுள்ளார்.அவ்ர் பயணம் வெற்றிகரமாக அமைந்து அவர் நலமுடன் வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி! அண்ணன் அமெரிக்கா சென்ற போதும் அந்த தொலைவு தெரியா வண்ணம் தினந்தோறும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இயக்க பணிகளை மேற்கொண்டிருந்தார்.அண்ணனை இயக்க தம்பிகள் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்.தற்காலிக பொறுப்பேற்றிருந்த அண்ணன் தூத்துக்குடி சிங்கம் பொன்ராஜ் ஜான்சன் அவர்களுக்கு நன்றிகள்.
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support