நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 5 செப்டம்பர், 2020

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.ஆன்கல்வி மூலம் மாணவர்கள் தற்கொலை, ஆன்லைன் கல்விக்காக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க மக்கள் படும் சிரமங்கள் போன்ற வற்றையும் எதிர் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பையும் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.ஆன்லைன் கல்விக்கு தேர்வு நடத்தக்கூடாது, பதிவேடுகள் பராமரிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Share:

வியாழன், 3 செப்டம்பர், 2020

புதன், 2 செப்டம்பர், 2020

நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது

நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது.முதலமைச்சர் 10 பேருக்கு மட்டும் விருதுகள் அவர் கையால் வழங்க உள்ளார்.மீதி பேருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்படும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதால் 5ம் தேதிக்கு பதில் 7 ம் தேதிக்கு மாற்றப்பட்டது.பட்டியல் இன்று 03-09-2020 வெளியாகிறது.
Share:

தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.

 


*தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.


நெல்லை மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு இடைநிலை ஆசிரியராக ஏ.பாக்கியா ரெக்ஸிலின் நியமிக்கப்பட்டார்.


இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை நிராகரித்து வட்டார கல்வி அலுவலர் 23.1.2019-ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது பணி நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பாக்கியா ரெக்ஸிலின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:


வட்டார கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவில் பள்ளி நிர்வாகத்தின் கடிதத்தை நிராகரிக்க தேவையற்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கடிதம் அனுப்பும் போது, பள்ளியின் தீத்தடுத்து மற்றும் சுகாதாரச் சான்றிதழ் கேட்பது அபத்தமானது. இதுவரை கேள்விப்படாத ஒன்று.


ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு தான் உண்டு. வட்டார கல்வி அலுவலர் பள்ளியின் கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய வேண்டும்.


பரிந்துரை அதிகாரம் மட்டுமே உள்ள வட்டார கல்வி அலுவலர் இயந்திரத்தனமாக செயல்பட்டு, தேவையற்ற காரணங்களை கூறி பள்ளியின் கடிதத்தை நிராகரித்துள்ளார்.


வட்டார அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையல்ல. பலமுறை நடைபெற்றுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை நாடுவதால் நீதிமன்றத்தின் சுமை தேவையில்லாமல் அதிகமாகிறது.


நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் மனதை செலுத்தாமல் தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு இயந்திரத்தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஏற்கக்கூடாது. பொருந்தா காரணங்களை கூறி உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


எனவே நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 வாரத்தில் பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வட்டார கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட கல்வி அலுவலர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Share:

வெள்ளி, 8 மே, 2020

ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு இயக்க நிலைப்பாடும்.வேண்டுகோளும்

ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு
இயக்க நிலைப்பாடும்.வேண்டுகோளும்!

59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு என்ற அரசாணை என் 51 பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை நாள் 07/05/2020 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை இயக்கங்கள் அல்லது ஆசிரியர்,அரசூழியர் கோரிக்கை மீது வழங்கப்பட்டது அல்ல.

இது நிதி நிலையை கருத்தில் கொண்டு அல்லது தற்போது 2020-2021  ல் ஓய்வு பெறுபவர் ஓய்வூதிய பலன்களை வழங்க மனமின்றி எடுக்கப்பட்ட முடிவு.
இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பை பறித்து இளைஞர்கள் வாழ்வை சீரழித்துவிடுமா? என்றால் இல்லை.
ஏற்கனவே புதிய வேலை வாய்ப்புகளை பறிக்கும் அரசாணைகள் ஒப்பந்த  அடிப்படையில் நியமன அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும்,போராட்ட காலத்தில் நம் வேலையை பறித்து ஒப்பந்த ஆசிரியர் நியமனம் செய்ய அரசு முடிவு செய்த போது லட்சக்கணக்கில் விண்ணப்பித்த சமூகம் இது.
அவர்களுக்கு முறையாக பணியளிக்க வேண்டும் என்றே போராடினோம்.
சமூகத்தைப் பற்றி கவலைப்படும் நேரத்தில் சக பணியாளர்கள் பற்றியும் கவலப்பட வேண்டும்.தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் பற்றி கவலைப்படாமல் அவர்கள் கருத்து அறியாமல் பொத்தாம் பொதுவாக கருத்து கூற நம் இயக்கம் விரும்பவில்லை.
இந்த அரசாணை வேண்டாம் என்று கூறுவது அடுத்து வரும் அரசுக்கும் நாம் கூறுவதுபோல் ஆகிவிடும்.
ஆதரிப்பது இந்த நிலையில் அரசு நம் நன்மைக்காக அரசாணை வெளிட்டது என்பதாக ஆகிவிடும்.எனவே , வீண் விவாதம் ஆக்காமல் மௌனமாக கடந்து செல்வதே சரி என இயக்கம் கருதுகிறது.
எனவே, ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கம் சக இயக்க தலைமைகள்,ஜேக்டோ -ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்கங்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோரை அன்போடு கேட்டுக் கொள்வது இந்த அரசாணை விளம்பரப் படுத்தவோ இது குறித்து பேட்டிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கவோ வேண்டாம் மறுபரிசீலனை செய்யுங்கள்!!இதுவே இன்றைய கொரானா நெருக்கடி நிலையில் நல்லது.
இவண்,
மாநில அமைப்பு.
டே.குன்வர் சோசுவா வளவன்
மாநில தலைவர்
சி.ஜெகந்நாதன்
பொதுச்செயலாளர்.
வை.பொய்யாமொழி
மாநில பொருளாளர்.
ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Share:

திங்கள், 13 ஏப்ரல், 2020

இந்தியாவில் கொரானா வால் பாதிக்கப்பட்டோர்,இறந்தோர் தேதி வாரியாக முதல் நபர் முதல்13/04/2020 முடிய

இந்தியாவில் கொரானா வால் பாதிக்கப்பட்டோர்,இறந்தோர் தேதி வாரியாக முதல் நபர் முதல்13/04/2020 முடிய


Share:

வியாழன், 2 ஏப்ரல், 2020

கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? கோவை KMCH கல்லூரி மாணவர்கள்ஆய்வு முடிவுகள்

கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? கோவை KMCH கல்லூரி மாணவர்கள்ஆய்வு முடிவுகள்
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? ஆய்வு முடிவுகள்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நீண்ட காலம் மக்கள் பயன்படுத்தி வரும் கபசுர குடி நீர்
இயற்கை வைத்தியம் குறித்து கோவை KMCH கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனர்.அம்முடிவுகளை 
INTERNATIONAL JOURNAL OF CURRENT ADVANCED RESEARCH அங்கீகரித்துள்ளது.அந்த ஆராய்ச்சியில் கபசுர குடி நீர் பன்றி காய்ச்சல் மருந்தாக மற்றும் ,ஆண்டி வைரல் ஆகவும்,ஆண்டி பையாடிக் ஆகவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட கபசுர குடி நீர் பயன்படுத்தலாம் என மக்களிடையே பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது.எனினும் இது குறித்து அரசு அங்கீகரமாக எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.டெங்கு காய்ச்சல் போது நில வேம்பு குடி நீரை பரிந்துரைத்தது.





Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support