நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

புதன், 18 அக்டோபர், 2017

20/10/2017 ம் இடைநிலை ஆசிரியர் கடமையும்!

20/10/2017 ம் இடைநிலை ஆசிரியர் கடமையும்!
ஊதியக்குழு அறிக்கை அரசாணை வெளிவந்து விட்டது.நாம் பயந்தபடியே முரண்களின் மொத்தவடிவமாக அமைந்துவிட்டது.இதெல்லாம் நடக்குமென்பதை அறிந்தே இருந்தோம் அனைவரும். ஒரு சிலரோ நம்புகிறோம் போராட்டம் வேண்டாமென்றார்கள்.இப்போதும் நம்புகிறோமென்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கோர்ட் எடுத்த நடவடிக்கை மூலம் கோர்ட் கெடுவிதித்த 13/10/2017 க்கு இரண்டுநாட்கள் முன்னதாக அரசாணை 303 வெளியிடப்பட்டது. அதுவும் அரசாணை வெளியிடப்படாவிட்டால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டிய சூழலில் மொத்த ஊதிய அதிகரிப்பே 20 சதம் இல்லாத நிலை. இதற்கு அரசாணையையே வெளியிட்டு விடலாம் இதை வைத்து சிறிதுகாலம் குழப்பலாம் என்ற சிறுமதியாளர் சூழ்ச்சி. இதெல்லாம் விட மிகப்பெரும் அதிர்ச்சி, வேதனை இந்த ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு சரிசெய்யப்பட காத்திருந்தும் ஏமாற்றம் தலையில் இடியென. கோர்ட் 23/10 ல் கூடுகிறது.வழக்கறிஞர் மூலம் வாதங்கள் நாம் வைத்தாலும் அரசுக்கு நாம் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளோம் ,இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு களையாமல் ஓயமாட்டோம்.CPS ஐ முற்றாக களையும் வரை போர்க்களத்தை துறக்கமாட்டோம் என்ற நிலை உணரவைக்க அணி அணியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில்களில் திரள்வோம்.நம் முகத்தில் கரி பூசிட துணிந்தவர் முன் முகம் சிவக்க அணி வகுப்போம்.வெற்றி நமதே!

டே.குன்வர்.
மாநிலதலைவர்
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி

Share:

திங்கள், 16 அக்டோபர், 2017

தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!

தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!
டெல்லி: மத்திய அரசின் 'ஏக்பாரத்' என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள், பண்பாடு, பண்டிகைகள் படத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தின் நோக்கங்கள் என்ற பிரிவில், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வகையான கலாசாரங்கள் இருப்பதை பெருமையாக அது குறிப்பிட்டுள்ளது.
வெப்சைட்டின், முகப்பு பக்கத்தில், 'ஏக்பாரத் சிரேஷ்ட பாரத்' (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) என்று ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு அதில் இடம் இல்லை. நம்மை விட குட்டி மாநிலமான கேரளாவின் மலையாளம் கூட முகப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், கல் தோன்றி, மண்தோன்றா காலத்தே உருவான தமிழுக்கு அங்கு இடமில்லை.

Share:

சனி, 14 அக்டோபர், 2017

இடைநிலை ஆசிரியருக்கு எது தீபாவளி!

இடைநிலை ஆசிரியருக்கு எது தீபாவளி!
வேலைநிறுத்தம் முடித்து, வேலைநிறுத்த நாட்களை நாமே ஈடு செய்வோம் என்று அறிவித்துவிட்டு போராடிய நிலையில் நீதிமன்றமும் ஈடுசெய்து கொள்ளக்கூறிவிட்டது!இந்நிலையில் கல்வித்துறை தன் ச்சபட்ச விசுவாசத்தைக் காட்ட தீபாவளியன்றும் பணிசெய்ய ஆணையிட்டு பணித்திருக்கிறது.இது ஒன்றும் நமக்கு வருந்தற்குரிய செய்தி அல்ல!நம் கோரிக்கைகள் வெல்ல தீபாவளியன்று சிறையில் இருக்கக்கூட தயாராக இருந்த நமக்கு பணி செய்தல் மகிழ்ச்சியே!ஆனால் கல்வித்துறை மாணவர்கள் வருவார்களா?என்பதை உணராமல் ஆணைபிறப்பித்தார்களா?அல்லது தீபாவளி என்று அறியாமல் ஆணையிட்டார்களா?தெரியாது!பின் இந்த ஆணையில் மாற்றம் செய்தால் கல்வித்துறை பொறுப்பற்ற நிலை அல்லது பழிவாங்கும் நிலை வெளிப்படும்.மாற்றம் செய்யப்படாவிட்டால் அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நிலை வெளிப்படும்.எதுவரினும் கவலையில்லை.இடைநிலை ஆசிரியர் நிலை போராட்டத்தின் பின்னும் ,ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட பின்னும் அதே நிலையே தொடர்கிறது.இடைநிலை ஆசிரியரோ கண்ணீரோடு விக்கித்து நிற்கின்றார்.கொண்டாட்ட மனப்பான்மை ஏது.இந்நிலையில் நன்றி சொல்ல ஏதுமில்லை எனாத்தெரிந்தும் குரூர சிந்தையோடு ஒரு கூட்டம் நன்றி தெரிவிக்கும் நிலை.நீண்ட தூர போராட்ட பாதையானாலும், முழுமையாக நம்மை தியாகப்படுத்திக்கொள்கிற போராட்டமானாலும் சரி எப்போது ஊதியமுரண்பாடு களையப்படுகிறதோ?எப்போது புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிக்கப்படுகின்றதோ?அன்றுதான் உண்மையான தீபாவளி ஆசிரியர் சமுதாயம் கொண்டாட இயலும்.தயாராவோம் இன்னொரு போருக்கு! டே.குன்வர். மாநிலதலைவர் ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
Share:

வெள்ளி, 13 அக்டோபர், 2017

JSR TESTF மாநிலதலைவர் குன்வர் உரை

7வது சம்பளக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஜாக்டோஜியோ ஆலோசனை கூட்டத்தில் கொந்தளிக்கும் மாநில தலைவர்.....

Share:

ஜேக்டோ ஜியோ முடிவுகள்

1) 20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை,அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்
2)23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support