நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

உங்கள் குழந்தைகளை சேர்க்கப்போவது அரசுப்பள்ளியிலா?தனியார் பள்ளியிலா? ஆனந்த விகடன் சர்வே முடிவுகள்!

உங்கள் குழந்தைகளை சேர்க்கப்போவது அரசுப்பள்ளியிலா?தனியார் பள்ளியிலா? ஆனந்த விகடன் சர்வே முடிவுகள்!
Share:

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தேர்வு நிலை பெற சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கண்டறிய தேவையில்லை.

தேர்வு நிலை பெற சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கண்டறிய தேவையில்லை.
Share:

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்



பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தற்போதையநிலை, மாணவர்களுடைய எண்ணிக்கை, மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறைந்த மாணவர்களை கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்தும், சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 1,053 ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்-ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தல், ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பன ஆய்வில் முக்கியமானவை ஆகும்.

2017-2018-ம் ஆண்டில் 10 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 36,930 மாணவர்களில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த குறையை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்ப பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அப்படி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப் பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Share:

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 95 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி, ஆறு முதல், 10 வரை உயர்நிலைப்பள்ளியாக பிரிக்கப்படுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேறு காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கமாக இருந்தது. சமீப ஆண்டுகளில், அப்பணியிடங்கள் காலியாக இல்லாததால், வேறு இடங்களுக்கு மாற்ற முடியாமல், தரம் இறக்கப்படும் சூழல் நிலவியது. தற்போது, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், அதே உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், அதற்கு அனுமதிக்கலாம் என, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அதே ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், விருப்ப கடிதம் பெற்று, உயர்நிலைப்பள்ளிகளில் நியமிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Share:

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

தலைவரின் தகவல் துளிகள்

துணிச்சல் நம்பிக்கை தருகிறது!
நம்பிக்கை போராட வைக்கிறது!
தோல்வி தொடர் முயற்சி தருகிறது!
தொடர் முயற்சி உலகை திரும்பி பார்க்க வைக்கிறது!
திரும்பிப் பார்க்கும் உலகம் சரித்திர ஏடுகளில் உன் பெயரை அழியா நிலையில் பதிவு செய்கிறது!
விலைகளும்,வலிகளும் கொஞ்சமல்ல!
விரைவில் விடை வரும்!
சரித்திரம் உனக்கு இடம் தரும்!
வாழ்த்துக்கள் அன்புத் தம்பி  ஏங்கெல்ஸ்!
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.

Share:

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

காலதாமத அரசாணைகள்!அலைகழிப்பு குமுறல்!

நேற்று கேரள மக்களுக்கு உதவ ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.ஏறக்குறைய அனைவரின் ஊதியப் பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.ஒரு வாரம் முன்னதாக ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அரசூழியர் அனைவரும் ஒரு நாள் ஊதியம் வழங்கியிருப்பர்.இது போல கடைசி நேரத்தில் பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு போனஸ் பொங்கலுக்கு பல பேருக்கு கிடைக்கவில்லை.அது போல அகவிலைப் படி அரசாணை மாத கடைசியில் வெளியிட்டு அலைகழிப்பு செய்வது.இனி இது போன்ற அரசாணைகள் உரிய காலத்தில் வெளியிடப்பட்டால் அதன் பலன் சிரமமில்லாமல் முழுமையாக உரியவர்களை போய் சேரும்.பெரும்பாலான கோப்புகள் கடைசி நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Share:

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது

கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது !

1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3.ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்

.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.

Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support