நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

TET & PGTRB ஆன்லைன்

கலந்தாய்வு எவ்வாறு

நடைபெறும்?
ஆன்லைன் கலந்தாய்வு
அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய
நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு
நடைபெறும் இடம் ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்
கல்வி அலுவலகத்தால் நாளை
அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு
துவங்க இருப்பதால், கலந்தாய்வில்
கலந்து கொள்ள இருக்கும் அனைவரும்
காலை 7.30 மணிக்கே உரிய
இடத்திற்கு செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு
எனும் போது பாடவாரியாக
மாவட்டத்தில் உள்ள
காலிப்பணியிடங்கள் பட்டியல்
தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.
(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள
குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு
பெற்றுள்ள தேர்வர்கள்,
வரிசைகிரமமாக
நிறுத்தப்படுவார்கள்.தேர்வு
பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு
நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்பட்டு
அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு -
எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்
உடன் செல்லும் மற்ற நபர்கள்
கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே
அலைபேசி தொடர்பை பயன்படுத்த
தயாராக இருக்கவும்)
பாடவாரியாக
அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர
வரிசைப்படி அழைக்கப்பட்டு
பட்டியலில் உள்ள இடத்தில்
தங்களுக்கு தேவையான இடத்தை
தேர்ந்தெடுக்க
அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்
தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30
நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே
தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட
நேரத்தில் அலைபேசியை
பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள். எனவே முன்னதாகவே
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
இடங்களை வரிசைகிரமமாக தர எண்
இட்டு தயாராக எடுத்து சென்றால்,
முதலாவது இடம் இல்லாவிட்டால்
இரண்டாவது இடம் என்றவாறு
தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு
முறை தங்களுக்கான சான்றிதழ்கள்
சரிபார்க்கப்படலாம். எனவே நாம்
முன்னதாக அறிவுறுத்தியபடி
அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட்
செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என
அனைத்தையும் தயாராக கொண்டு
செல்லவும். குறிப்பாக வேறு மாநில
பட்டம் பெற்றவர்கள் தங்கள்
சான்றிதழ்கள் மதிப்பீடு
செய்யப்பட்டிருப்பின்
அச்சான்றிதழ்களையும் கொண்டு
செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று
கொண்டிருக்கும்போதோ (அ)
முழுமையாக முடிவுற்ற பின்போ தான்
தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில்
தாங்கள் பணிபுரிய உரிய ஆணை
வழங்கப்படும். எனவே தேவையான
தண்ணீர், இதர சிறு உணவு
பொருட்களையும் கொண்டு செல்லவும்.
தங்கள் சொந்த
மாவட்டத்தில் பணி செய்ய உரிய
காலிப்பணியிடம் தாங்கள்
எதிர்பார்த்தபடி அமையவில்லை
எனில் அடுத்த நாள் நடைபெறும்
வேறு மாவட்டத்திற்கான
கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் (
சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற
கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ
அதே இடத்தில் தான் வேறு
மாவட்டத்திற்குள் பணிபுரிய
கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்
இருப்பின் முதன்மைகல்வி
அலுவலகத்தால் முறைப்படி
அறிவிக்கப்படும்).
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support