நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வியாழன், 12 அக்டோபர், 2017

கொடைக்கானல் எஸ்கேப் சாலை மர்மம்

Escape road

கொடைக்கானல் நகரிலிருந்
து மூணாறு நகரை இரண்டு
மணி நேரத்தில் சென்றடைய
ஏதுவான வழியே இந்த எஸ்கேப் ரோடு...இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் இந்த
சாலையைத்  திறக்க ஏன்
நாம் குரல் கொடுக்க கூடாது
என்ற எனது அண்ணன் எல்ல
ப்பட்டி முத்துராசுக்காக இந்த
பதிவு...

ஒருபுறம் சுற்றுலா என்றால்
கூட இன்னொரு புறம்...வர்த்த
க வாய்ப்புக்காகவும் இந்த
சாலையை திறக்க நாம் குரல்
கொடுக்க வேண்டிய தேவை
இருக்கிறது...என்றே நினைக்
கிறேன்...

கடல் மட்டத்தில் இருந்து  2480
மீட்டர் உயரத்தில் அமைந்துள்
ள இந்தச்சாலை 1925 ம் ஆண்
டு பிரிட்டிஷ்காரர்களால் போட
ப்பட்டிருக்கிறது...கொடைக்கா
னலிலிருந்து பேரீச்சம் ஏரி
வழியாக டாப்ஸ்டேசன் வரை
இந்த சாலை அமைக்கப்பட்டது

இந்த டாப்ஸ்டேசன் இன்றும்
தமிழக எல்லைக்குள் வரும் ஒரு ஊராகும்...போடி அருகே
உள்ள கொட்டக்குடி பஞ்சாயத்
திற்குட்பட்ட பகுதியாகும்...
இங்குள்ள view point வழியாக
குரங்கணி பாதையை பார்த்து
மகிழ்வது  பூலோக சொர்க்கம்.

இரண்டாவது உலகப்போர்
நடந்த போது திடீரென சென்
னையைத்தாக்கியது ஜப்பான்
அப்போது அங்கிருந்த பிரிட்டி
ஷ் அதிகாரிகள் தங்கள் உயிருக்கு பயந்து கொடைக்
கானல் வந்திருக்கிறார்கள்...
அங்கும் பயம் போகாததால்
அங்கிருந்து தப்பி டாப்ஸ்டேச
ன் வந்து மூணாறு வழியாக
கொச்சி க்கு சென்று அங்கிரு
ந்து கடல் மார்க்கமாக பிரிட்ட
னுக்குச்சென்றிருக்கிறார்கள்.
ஜப்பானுக்கு பயந்து எஸ்கேப்
ஆகி ஓடியதால்...சாலைக்குப்
பெயரே அதுவாகி விட்டது...

1990- வரை பயன்பாட்டிலிருந்
த இந்த சாலை கேரள வனத்
துறையின் அடாவடியால் இழு
த்துப்பூட்டப்பட்டது...பூட்டியதோ
டு நிற்கவில்லை மலையாள
அரசு...அந்த சாலையை உள்ள
டக்கி ஒரு சரணாலயத்தையும்
அமைத்து...அதற்கு பாம்பாடு
ம் சோலை தேசீயப்பூங்கா என
பெயரும் சூட்டியது...இதனால்
எஸ்கேப் ரோடு இழுத்துப்பூட்டி
சீல் வைக்கப்பட்டது...மேலாக
இடுக்கி மாவட்ட வனத்துறை
டாப்ஸ்டேசனிலிருந்து எஸ்கே
ப் ரோடு தொடங்குமிடத்தில்
ஒரு வனத்துறை சோதனைச்
சாவடியையும் அமைத்து ஆள்
போட்டது...

நீங்கள் மூணாறிலிருந்து கிரா
ம்ஸ்லேண்ட்...குண்டல அணை
மாட்டுப்பட்டி அணை...செண்டு
பாறை...சிட்டிவாரை...எல்லப்ப
ட்டி வழியாக டாப்ஸ்டேசனை
அடைந்து அங்கிருந்து வனச்
சாலை வழியாக தமிழக எல்
லைக்குள் அமைந்துள்ள பேரீ
ச்சம் ஏரி வழியாக கொடைக்
கானலை அடையமுடியும்...
பயண நேரம் வெறும் இரண்டு
மணிநேரம் மட்டுமே...ஆனால்
இப்போது நீங்கள் மூணாறிலி
ருந்து கொடைக்கானல் செல்
ல பூப்பாறை போடிமெட்டு
தேனி பெரியகுளம் காட்ரோடு
வழியாக செல்லவேண்டும்
பயணநேரம் ஐந்து மணிநேரம்

இதில் வெறும் சுற்றுலா மட்டு
மல்ல...மேலாக மூணாறு to
டாப்ஸ்டேசன் வரையுள்ள 29
கிமீ சாலையிலுள்ள TATA
வின் தேயிலைத்தோட்டத்தில்
நமது தமிழ் தேயிலைத்தோட்ட
தொழிலாளர்கள் தங்கள் ஓய்
வு நேரத்தில் உருவாக்கிய
விவசாய பூமியில் கேரட்டும்
உருளைக்கிழங்கும் டன் கண
க்கில் விளைந்து குவிகிறது...
எல்லப்பட்டி கிராமமே இதில்
முதலிடத்தில் இருக்கிறது..இப்
படி விளையவைக்கும் காய்க
றிகளுக்கு சரியான சந்தை
வாய்ப்பு இல்லாததால்....சா
லையோரத்தில் கடைபோட்டு
டாப்ஸ்டேசன் வரும் சுற்றுலா
பயணிகளுக்கு வெறும் ஐந்து
க்கும் பத்துக்கும் விற்றுக்கொ
ண்டிருக்கிறார்கள்...

பேரீச்சம் ஏரி வழியாக கொடைக்கானல் செல்லும்
எஸ்கேப் சாலை திறக்கப்பட்டா
ல் பல்லாயிரக்கணக்கான தமி
ழ் மக்களின் உழைப்பை காசா
க்கமுடியும்...

டாப்ஸ்டேசன் வரும் கேரள
சுற்றுலா பயணிகள் வெகு
எளிதாக கொடைக்கானல்
மலையை அடையமுடியும்....

இல்லாவிட்டால் கொடைக்கா
னல் மலையிலிருந்து கிளாவ
ரை என்கிற தமிழக எல்லைப்
பகுதியிலிருந்து...வெறும் பத்
து கிமீ தூரத்தில் கேரள மாநி
லத்துக்குட்பட்ட....தமிழர்கள்
மட்டுமே வாழும் கோவிலூர்
வருகிறது...இந்த கோவிலூர்
நகரிலிருந்து டாப்ஸ்டேசன்
வெறும் ஏழு கிமீ தான்...இந்த
பண்படுத்தப்படாத சாலையை
யே இப்போது தட்டுத்தடுமாறி
வட்டவடை...கோவிலூர் தமிழ்
மக்கள் பயன்படுத்தி வருகிறா
ர்கள்...இந்த சாலையில் மூன்
று கிமீ மட்டும் பாம்பாடும்
சோலை தேசீயப்பூங்கா குறுக்
கிடுகிறது...

ஒன்று டாப்ஸ்டேசன் பேரீச்சம் ஏரி வழியாக செல்லும் எஸ்கே
ப் சாலையை திறப்பது...

இரண்டு வட்டவடை கோவிலூ
ர் கிளாவரை வழியாக கொடைக்கானல் நகரை அடைவது வரையிலான சாலையைத்திறப்பது...என
இரண்டு வாய்ப்புகள் இருக்கி
றது...

இடுக்கி தமிழர்களின் மேல்
மிகுந்த அக்கறையுடன் இந்த
கோரிக்கையை நான் கேரள
வனத்துறை அமைச்சர் திரு
புனலூர் ராஜீ அவர்களுக்கு
அனுப்பி வைக்க இருக்கிறேன்

அண்ணன் செந்தமிழன்
சீமான் வழிகாட்டுதலோடும்
மற்றும் மூத்தவர்களின் அன்
போடும்....

இதற்கு உறுதுணையாக இரு
க்கும் வட்டவடை கோவிலூர்
எல்லப்பட்டி சிட்டிவாரை செண்
டுவாரை கிராம்ஸ்லேண்ட்
நெற்றிக்குடி அருவிக்காடு
தமிழர்களுக்கும்...அண்ணன்
மூணாறு மோகன்ராஜ் அவர்
களுக்கும் நாம்தமிழர் கட்சி
பிள்ளைகள் செலுத்தும் நன்
றியும்....அன்பும்...

ச அன்வர் பாலசிங்கம்

Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support