நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பெங்களூரு அருகே ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்கும் கிராமம்!

கோயில்களில் சாமிசிலைகள் பிரதிஷ்டை செய்து வணங்குவது வழக்கமான நடைமுறை. தேசதலைவர்கள், தியாகிகளுக்கு சிலை அமைப்பதும் வழக்கமான ஒன்று. நடிகர், நடிகைகளுக்கும் கோயில் கட்டி வழிபடும் ரசிகர்கள் உண்டு. ஆனால் கல்விகற்பித்த ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்குவதை கேள்விப்பட்டுள்ளீர்களா அல்லது கண்டுள்ளீர்ளா? கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள அதர்கா கிராமத்தில் கல்வி கற்பித்த ஆசியருக்கு குரு தட்சணையாக கோயில் கட்டி அவரது சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த புகழுக்கு சொந்தமான ஆசிரியர் பெயர் ரேவண சித்தேஷ்வரா. இவரது சிலைக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடக்கிறது.


கடந்த 1889ம் ஆண்டு விஜயபுரா மாவட்டம் பசவன பாகே வாடி தாலுகாவில் வசித்த மன கோலி கிராமத்தில் சிவப்பா-லட்சுமி பாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் ரேவணசித்தேஷ்வரா. இவர் இண்டிதாலுகா அதர்கா கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பாமர மக்களாக இருந்த கிராமத்தினரிடையே சமூக உணர்வை ஏற்படுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவரின் போதனைகள் கிராமத்தினருக்கு புத்துணர்வு கொடுத்தது. கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் ஒவ்வொரு வீட்டு பிள்ளையும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டினார். அதன் பயனாக ஆயிரக்கணக்கானோர் கல்வி கற்று தேர்ச்சி பெற்றனர். 1925ம் ஆண்டு ரேவண சித்தேஷ்வரா இயற்கை எய்தினார். இவரது மரணம் கிராம மக்களை பாதித்தது. அவரது நினைவாக அந்த கல்வி மகானுக்கு கோவில் கட்ட கிராம மக்கள் தீர்மானித்தனர். மக்கள் ஒன்று திரண்டு அவர்களால் இயன்ற பொருளுதவி வழங்கி ஆசிரியர் ரேவன சித்தேஷ்வராவுக்கு கோயில் எழுப்பினர். கருவறையில் அவரது சிலையை பிரதிஷ்டை செய்து இன்று வரை கடமை தவறாமல் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

ஆசிரியர் தினமான இன்று அகர்தா கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டில் ஆசிரியர்களுக்கு எங்கும் கோவில் அமையவில்லை. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள இந்த ஆசிரியர் கோவிலுக்கு அண்டை மாவட்டத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசியைகள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மாணவகள் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால நாட்டின் மன்னர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு குருவந்தனம் செய்யும் வகையில் கோயில் கட்டி கும்பிடும் அகர்தா கிராமத்தினருக்கு நாமும் நன்றி காணிக்கை செலுத்துவோம்.
Share:

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

05-09-2015 செய்திகள்

*ஆசிரியர்களுக்கு மீண்டும் இடமாறுதல் கலந்தாய்வு

*மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி

*தொடக்கக்கல்வி - செப்டம்பர் 1 முதல் 7 தேதி வரை"ஊட்டச்சத்து வாரம்" கொண்டாட இயக்குனர் உத்தரவு

*சிறையில் ஆசிரியர் பணியிடம் செப்., 18ல் நேர்காணல்

*ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி

*ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் தர ஐ.டி., நிறுவனங்கள் தயார்

*பள்ளிக்கல்வி :2015/2016 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதுகள் - தகுதிஉள்ள பரிந்துரைகள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் - கடைசி தேதி 30.09.2015

*டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

*ஆசிரியர்களின் நிலையை உயர்த்த உறுதியேற்போம்: ராமதாஸ்

*கல்விக் கடன் வட்டி மானியத்தில் முடங்கிக் கிடக்கும் ரூ.2,426 கோடி : ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ள வங்கிகள்

*மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

*புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:

*ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை‎

*ஆசிரியர்தின‬ சிறப்பு பதிவு- 11 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தாயுள்ளம்!

*புதிய தலைமுறை "ஆசிரியர் விருது"

*தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்; அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

*ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு

*தில்லி பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராகும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: தொலைக்காட்சிகளில் இன்று நேரடி ஒளிபரப்பு

*நீதிமன்றங்களில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

*திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி.படிப்புகள் அறிமுகம்

*பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம்

*இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

Share:

ஆசிரியர் தினம்(TEACHERS DAY)

ஆசிரியர் தினம்
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

💐ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

💐ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம்
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
💐
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
Share:

வியாழன், 3 செப்டம்பர், 2015

04-09-2015 செய்திகள்

*ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

*புவியல் முதுகலை பட்டதாரி ஆசரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி "(CONTENT ENRICHMENT TRAINING ) - இயக்குனர் செயல்முறைகள்

*போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் -விரைவில் அறிவிப்பு

*BRTE Mutual Transfer : ஆசிரியப்பயிற்றுனர்கள் மனமொத்த மாறுதல் தேதி அறிவிப்பு...

*கல்வி மானியக் கோரிக்கை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்...

*Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

*புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; ரூ.6,000 கோடி வங்கிக்கடன்:பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

*ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: பகுதிநேர கலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படும் - அமைச்சர் வீரமணி தகவல்

*மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில்இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

*வருகிறது பாடத்திட்டத்தில் மாற்றம்

*499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்.

*பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சசர் அறிவிப்பு

*TNPSC : பொதுப்பணி இன்ஜி., பணிக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

*மாணவர்களுக்கு இலவச வாய்ப்பாடு புத்தகம்.

*போராட்டத்தில் பங்கேற்ற பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை திரட்டும் அரசு

*Vijaya Bank Recruitment for 36 Probationary Managers Posts 2015

*பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

*பள்ளிகளில் நன்னெறி கல்வி: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

*TNPSC : நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்குஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

*1,078 எஸ்ஐகளை தேர்வு செய்ய இன்று முதல் நேர்முகத் தேர்வு

*அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம்'

*கேட்' தேர்வு தேதி அறிவிப்பு"

*ஜேம்' 2016: விண்ணப்பிக்க அக்.14 கடைசி
📚📚📚📚📚📚📚📚📚
Share:

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.

அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!

குறைந்த பட்ச ஊதியம்  ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
குறைந்த பட்ச ஊதியம் (Minimum Wage )
1.1.2014 அன்று ஒரு மத்திய அரசு
ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் 5200 + 1800
= 7000 ஆகும். அன்றைய தேதியில் அவர்
வாங்கியது 100 % D.A. எனவே, அதையும்
சேர்த்து அவரது சம்பளம் 14 ஆயிரம் ஆகும்.
இதைத்தான் ரூ. 26000/- ஆக்க Staff side
(JCM) கோரி உள்ளது.
1957 ம் ஆண்டு இந்திய தொழிலாளர் 15
வது மாநாடு குறைந்த பட்ச ஊதியம்
எப்படி கணக்கிட வேண்டும் என்றும்
வரையறுத்து உள்ளது. இது Dr. Aykroyd
formula எனப்படுகிறது. இதன்படியான
வரையறைகள்.
1. ஒரு தொழிலாளியின் ஊதியம் என்பது
கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்குத்
தேவையான கலோரியை ஈடுகட்ட
தேவையான பொருள்களின் விலையை
அடிப்படையாக கொண்டது.
2. ஒரு நாளைக்கு ஒருவர் இழக்கும்
கலோரி 2700 ஆகும்.
3. கணவனுக்கு ஒரு unit. மனைவிக்கு
0.8unit . இரு குழந்தைகளுக்கு each 0.6
unit. ஆக மொத்தம் 3 unit க்கு தேவையான
செலவைக் கணக்கிட வேண்டும்.
4. இந்த நால்வரும் சேர்ந்து ஒரு மாதத்தில்
பயன்படுத்தும் குறைந்த பட்ச
பொருள்களின் பட்டியல்.
Commodity Quantity
1 அரிசி/ கோதுமை 42.75 Kg
2. பருப்பு வகைகள் 7.20 Kg
3. காய்கறிகள் 9.00 Kg
4. கீரை வகைகள் 11.25 Kg
5. இதர காய்கறிகள் 6.75 Kg
6. பழங்கள் 10.80 Kg
7. பால் 18.00 litre
8. சர்க்கரை / வெல்லம் 5 Kg
9. சமையல் எண்ணெய் 3.6 Kg
10 மீன் 2.5 Kg
11 மாமிசம் 5 Kg
12 . முட்டை 90
13 soap 14
14 Clothes 5.5 metre
1.1.2014 அன்று இந்த பொருட்களின் விலை
என்ன என்று கணக்கிடப் பட்டதில் அது ரூ.
11344/-
5. இத்துடன் 20 % உள்ளிட்டவற்றுக்கு
சேர்க்க வேண்டும். அது ரூ. 3129/- என்று
கணக்கிட பட்டு உள்ளது.
6. 3rd Central Pay Commission
குடிஇருக்கும் வீட்டுக்காக (HRA) 7.5 %
சேர்த்தது.
7. ஆக மொத்தம் ரூ. 15647/-
8. Supreme court ஒரு தீர்ப்பில் இவற்றுடன் 25
சதம் மருத்துவ செலவுகளுக்கும் கல்வி
செலவுகளுக்கும் சேர்க்க கோரி உள்ளது.
அந்த அடிப்படையில் ரூ. 20861/- ஆகிறது.
இது unskilled employee க்கான கணக்காகும்.
ஆனால் இன்று மத்திய அரசில் அனைத்து
துறைகளிலும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி unskilled employee க்கே 10ஆம்
வகுப்பு என்று வந்து விட்டதால் மத்திய
அரசில் அனைவருக்கும் குறைந்த பட்ச
ஊதியமாக skilled employee சம்பளத்தை
நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி
உள்ளனர். அதற்கு unskilled employee
சம்பளமான ரூ. 20861/- உடன் 25% சேர்க்க
வேண்டும். அது ரூ. 5214/- அதை
சேர்த்தால் ரூ. 26075/- வருகிறது.
ஆகவே ரூ.26000/- த்தை Minimum wage
என்று நிர்ணயிக்க வேண்டும் என STAFF SIDE
(JCM) கோரி உள்ளனர்.
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் விவரம்(TET)

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் முந்தைய விவரம் : தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.
அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....
ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை:
இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 சதவீத மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்..
இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...
என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை :
ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..
என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடீரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5 சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள் அவ்வாறு அளிக்க தமிழக அரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்.... என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???
போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?
5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. ஒருவேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என சூசகமாக தெரிவித்தார்....

Share:

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

(7th pay commision)7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதியக் கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7-வது ஊதியக் கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
Share:

சனி, 15 ஆகஸ்ட், 2015

பணி நிரவல் ஒன்றித்திற்குள்ளேயே செய்துகொள்ளலாம்.- 10-08-2015 இயக்குனர் சந்திப்பு

ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் டே.குன்வர் சோஸ்வா வளவன் பொதுச்செயலர் ஜென்நாதன் மாநில பொருளாளர் வை.பொய்யாமொழி மாநில துணைச்செயலர் பொன்ராஜ் ஜான்சன் , தூத்துக்குடி மாவட்ட செயலர் ஸ்டீபன் , சிவகெங்கை மாவட்ட செயலர் செல்லப்பா , தலைவர் அருளானந்து , வேலூர் மாவட்ட செயலர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கொடைக்கானல் ஆரோக்கியசாமி ஆகியோர் மாண்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்களைச் 10.08.2015 அன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் . மனுவை பரிசீலித்த இயக்குனர் கீழ்கண்ட உறுதிகளை அளித்திட்டார்
1.பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொண்டால் முழுசம்பளம் வழங்க ஆணை.
2.இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் சார்பு ஆணை .
3. விலையில்லா பொருட்களை பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு.
4.காலநிலை , கடுங்குளிர் போன்ற பிரச்சனைகள் நிலவும் கொடைக்கானல் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைத்தல் .
5.வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் உ.தொ.க.அலுவலத்தில் தேங்கியுள்ள 170பணப்பலன் சார்ந்த கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு போன்ற உறுதி மொழிகளை அளித்திட்டார் . மேலும் இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை சார்ந்த போராட்டம் தொடர்பாக முடிவெடுக்க விரைவில் மாநில பொதுக்குழு திருச்சியில் கூடும் .
 -மாநில தலைவர்


Share:

teachers district transfer application&director proseedings

district transfer application






Share:

வெள்ளி, 9 ஜனவரி, 2015

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

தாயகம் திரும்பிய அண்ணனை வாழ்த்தி வரவேற்கிறோம்!

இயக்க அடலேறுகளே!

                                 இயக்கத்தின் இதயமாகவும் , நமது இதயத் துடிப்பாகவும் விளங்கும் அண்ணன் பொதுச்செயளாளர் ஜெகனாதன் அவர்கள் அமெரிக்கா சென்று வியாழன் இரவு தாயகம் திரும்பியுள்ளார்.அவ்ர் பயணம் வெற்றிகரமாக அமைந்து அவர் நலமுடன் வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி! அண்ணன் அமெரிக்கா சென்ற போதும் அந்த தொலைவு தெரியா வண்ணம் தினந்தோறும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இயக்க பணிகளை மேற்கொண்டிருந்தார்.அண்ணனை இயக்க தம்பிகள் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்.தற்காலிக பொறுப்பேற்றிருந்த அண்ணன் தூத்துக்குடி சிங்கம் பொன்ராஜ் ஜான்சன் அவர்களுக்கு நன்றிகள்.
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support