தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!
டெல்லி: மத்திய அரசின் 'ஏக்பாரத்' என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள், பண்பாடு, பண்டிகைகள் படத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தின் நோக்கங்கள் என்ற பிரிவில், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வகையான கலாசாரங்கள் இருப்பதை பெருமையாக அது குறிப்பிட்டுள்ளது.
வெப்சைட்டின், முகப்பு பக்கத்தில், 'ஏக்பாரத் சிரேஷ்ட பாரத்' (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) என்று ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு அதில் இடம் இல்லை. நம்மை விட குட்டி மாநிலமான கேரளாவின் மலையாளம் கூட முகப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், கல் தோன்றி, மண்தோன்றா காலத்தே உருவான தமிழுக்கு அங்கு இடமில்லை.
திங்கள், 16 அக்டோபர், 2017
Home »
» தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!
0 comments:
கருத்துரையிடுக